Photobucket

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

தாயக பூக்கடை













சூரியன் திணிந்தும்
சுருங்கா இருட்டாய்

உலகத்தின் உருகாட்டும்
கண்ணாடியாய்

இழிந்ததின் அடையாளமாய்

குருட்டு நீரே
உன் மீதுதான் எத்தனை
கோணங்கள்..

சுகாதாரம் முழங்கும்
சுயநல சமூகம்
தன் கழிவு யாவயும்
உன் மேல் கிடத்தி
சாக்கடை என்றே உன்னை
சாற்றும்..

கைப்பட்ட யாவையும்
உன் மெய்ப்பட எறிந்து
தேங்க வைத்து
தெருவைக் கெடுக்கும்..
முன்னேற விடாமல்
உன்னை தடுக்கும்..

கூடாரமிட்டு கிருமிகள்
சேதாரமாக்கும் நோய்களை
மகப்பெற்றிடினும்
அவை கருவுற்றது
யார் செய்கைகளால்.. ?

முந்நீர் தண்ணீர்
நன்னீர் எனும்
உயர்ச்சி யாவும்
நீ கரி பூசி கொண்டதால்தான்
மற்றவைகளுக்கு..

தாள்ந்தோர் உயர்வரெனும்
தத்துவ மொழிப்படி இனி நீ
சாக்கடை அல்ல
தாயக பூக்கடை..

-ஆதி

கருத்துகள் இல்லை: