மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..
ஒரு கடைக்காரனிடம் விலை பேசுவதில் இருந்து
பக்கோடாவுக்கு கொஞ்சம் கொசுறு வாங்குவது வரை
சாமர்த்தியம் போதாதவனாகவே பார்க்கப்படுகிறேன்
இந்த அவசர யுகத்தில்
அவனவனுக்கு வேண்டியதை அவனவனும்
அவனவனை பற்றி அவனவனும்
சுயநலமாய் யோசித்து பூர்த்தி செய்து கொள்ளும் நிலையிலும்
அடுத்தவனை மட்டம்தட்ட அமையும்
சந்தர்ப்பத்தை தவறவிடுவதே இல்லை
"இதற்கு போயா இவ்வளவு விலை கொடுத்த ?"
என்கிறார்கள்
மிக சிரமமானதாய் இருக்கிறது
என்னை திறமையற்றவனாகவே பார்க்கும்
இந்த உலகத்துக்கு
புத்திசாலியாய் என்னை நிரூபிப்பது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக