என் தனிமைக்கும்
அழுகைக்கும் ஒரே சுவை
தனித்திருக்கையில் அழுகையா
அழுகையில் தனிமையா
எதுவென தெரியாமலே
இரண்டும் வந்து சேர்க்கின்றன
பொல பொலவென பொங்கி
முழுக்க பரவி
கணகணக்கும் கண்ணீரின் ஈரத்தில்
எடை கூடி கனக்க ஆரம்பிக்கிற தனிமை
சுமக்க முடியாததாகிறது
மேலும் உறைந்தொரு பனிக்கட்டியாய் மாறி
தன் குளிர்ச்சியின் கூரிய ஊசியை
உயிர் முடிச்சில் பாய்ச்சி
துடிதுடிக்கையில்
குரூரப்பார்வையோடு எக்களிக்கிறது
கூட்டித்தள்ளிவிட முடிகிற
உலர்ந்த சருகை போலவோ
தூசியை போலவோ
இருப்பதில்லை தனிமை
பெரும் பாறையை போல
பெயர்த்துடுக்க இயலாத வண்ணம்
அது பதிந்திருக்கிறது.
யாருக்கு தெரியும்
அந்த பாறைக்குள்
ஓடிக் கொண்டிடுமிருக்கலாம்
இன்னும் சிந்தாத கண்ணீரின் ஜீவநதி..
என் தனிமை ஒருநாள்
உன்னுடையதுமாய் ஆகும் போது
உனக்கும் ஐயம் எழுலாம்
எது அழுகையின் சுவையென!!!!
3 கருத்துகள்:
உங்கள்
வலையை வலைச்சரம் மூலம் அறிந்துகொண்டேன்
நல்ல அர்த்த படலங்கலுள்ள கவிதை
கவிதைகள் எல்லாம் அருமை நண்பரே
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
தோழர் சிவஹரி வழங்கிய லீப்ஸ்டர் விருதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!
காண்க: http://anbummanidhamum.blogspot.in/2012/09/blog-post_16.html
தனிமை தரும் இன்பமும் சரி துன்பமும் சரி அலாதியானது தான், இன்னதென்று பிரித்தெடுக்க முடியாதவை... கவிதை எப்போதும் போல நன்று ஆதி... அட! இது என்ன அடிக்கடி வலைப்பூவின் தலைப்பும் டிசைனும் மாறிக்கொண்டே இருக்கிறதே!!!..
கருத்துரையிடுக