Photobucket

ஞாயிறு, 15 ஜூலை, 2012

சில்லுகள் - 2




















புன்னகை

எப்போதும்
எனை கடந்து போகையிலெல்லாம்
மறவாமல் ஒரு புன்னகையை உதிர்க்கும்‌
எதிர்வீட்டு தாத்தாவின் மரணத்தை
அறிந்த தருணத்திலிருந்து
ம‌ன‌தை குடைந்து கொண்டிருக்கிற‌து
போனமுறை அவருக்கு உதிர்க்க‌ த‌வறிய‌
பதில் புன்னகை

விடுவித்துக் கொளல்

இந்த வாழ்வின்
எல்லா துன்பத்துயர நெருக்கடி காரியங்களிலிருந்தும்
என்னை ஒட்டுமொத்தமாய் விடுவித்துக் கொள்வதென‌
தீர்மானித்தப் பிறகே
உன்னை இன்னும் தீவிரமாய்
காதலிப்பதென்று முடிவெடுத்தேன்

இரண்டு கவிதைகள்

பெருமதில்களால் நிர்மானிக்கப்பட்ட‌
அரண்களை கடந்து
எவராலும் நுழைந்துவிட முடியாது
உம் மனத்திற்குள்
சமயத்தில் உங்களாலும் கூட‌

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍========================

புன்னகையின் நிழலில்
இளைப்பாறிவிட்டு
புரப்படுகையில்
பயணத்தில் உண்டாகிற
தாகத்திற்கு வேதைப்படுமென்று
மொண்டு கொள்கிறாயோ
கொஞ்சம் எனது கண்ணீரை

1 கருத்து:

சாய் ராம் சொன்னது…

புன்னகையில் இளைப்பாறி... மிக நன்றாக வந்திருக்கிறது.