Photobucket

புதன், 9 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை



என்னை பார்க்க வந்திருந்தாள் அம்மு
எப்பொழுதும் போன்ற மகிழ்ச்சியும்
குழந்தை போன்ற இனிமையும்
அவளின் குரல்களில் நேற்று இல்லை..

மிகவும் அயர்ச்சியாகவும்
கனத்தடர்ந்த துக்கங்கள் நிறைந்தவளாகவும்
பாறையொன்றை வெட்டி முகத்தில் ஒட்டிக் கொண்டவளை போலவும்
இறுக்கமானவளாக இருந்தாள்..

அப்பொழுது என் வீட்டின் பின்புறத்தில்
உள்ள ஆலமரத்தின்
ஒரு மருங்கில் கழுகொன்று அலறிக் கொண்டும்
மற்றொரு மருங்கில் குயிலொன்று கூவிக் கொண்டும்
இன்னொரு மருங்கில் காகமொன்று கரைந்து கொண்டுமிருந்தது

அருகே சுற்றுச் சுவர்கள் எழுப்பிய
புதர் மண்டிய வெற்று மனையில்
கருநிறப் பாம்பொன்று சுவரேற
முயற்சித்துக் கொண்டிருந்தது..

அவளை அழைத்து அவற்றை காண்பித்தேன்

நிச்சலனத்தில் நிரம்பினாள் அம்மு....

கருத்துகள் இல்லை: