Photobucket

திங்கள், 28 பிப்ரவரி, 2011

தலைப்பற்ற கவிதை






















அவனின் தோட்டா
புணர்ச்சியிலீடுப்பட்டிருந்த
அந்த மிருகத்தின்
பிறப்புறுப்பில் பாய்ந்திட மரணக்குரலெழுப்பி
அது துடித்த தருணத்தில்
குரூர விழிகளோடு
வக்ர புன்னகை பூத்தவனின்
கனவுகளில் பாய்ந்து
அந்தரங்க உறுபுகளை குதறி
இரத்தம் நக்க
அலறி எழுந்தவன் எதிரே
பிளந்த வாய்களில் மரணம் வழிய
உயிர் பிதுங்கிய கண்களால்
அவனை பார்த்துக் கொண்டிருந்தது
விறைத்த மிருகத்தின் தலை....

கருத்துகள் இல்லை: