யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்
அத்தருணத்தில் வீரிட்டலறியது
என் அலைபேசி..
அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போலப்
பிரக்ஞை அறுபட
என்னை பார்த்தான் அவன்..
சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக