நான் மிக உயர்ந்து மேலெழுந்த
எனதன்பின் அலையை
பிரளயமாய் உன்னில் பாய்ச்சுகிறேன்..
அது
உனது யாதொரு பயத்தையும், மாயையையும்
அழித்துவிடும்
சில நேரம் விழிகளை மூடு.
அவ்வாறு நிகழ்கையில்
உனது கைகளில் மாசற்ற குழந்தையாக
இறைவன் மாறுவான்..
பின் படைப்பு யாவற்றையும்
நீ கவனித்துக் கொள்ள கடவாய்..
- ஹஃபீஸ்
------------------
An Infant In Your Arms
The tide of my love
Has risen so high let me flood
over
You.
Close your eyes for a moment
And maybe all your
fears and fantasies
Will end.
If that happened
God would become an infant in your
Arms
And then you
Would have to nurse all
Creation!
1 கருத்து:
நல்லா இருக்கு ஆதி.
(இப்போதுதான் என் கவிதைக்கு உங்கள் பின்னூட்டத்தை விருட்சத்தில் பார்த்தேன், நன்றி)
கருத்துரையிடுக