ஊமையாய் இறுகிவிட்டிருந்தது
உன் வார்த்தையின் வலியக்கரங்கள்
என் உயிரின் குரல்வளையை நெரித்த
அத்தருணம்...
அது ஒரு மரணத்தைப் போல
தற்செயலான நேர்ச்சி அல்ல..
ஒரு படுகொலையை போல
திட்டமிடப்பட்ட நிகழ்வு..
என்றாலும்,
அதை நீ செய்திருக்க வேண்டாம்
உன் பூ உதடுகளால்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக